தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக திரு ஷெல்வீ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து மாற்று கட்சியினர் கேலி கிண்டலில் ஈடுபட்டு வருகின்றனர்...

அது அவர்கள் வழக்கம் .அதை புறந்தள்ளுவோம்..

ஆனால் நம்மில் பலருக்கும் அவரை ஜோதிடர் என்ற அளவிலேயே அறியபட்டு வருகின்றோம்...
இணையங்களில் தேடிய போது கிடைத்த தகவல்களை தேடி படித்த போது ஆச்சர்யம்

இவரா இத்தனை செய்கின்றார் இவரால் தமிழகத்தில் அரசியல் கூட்டணிகள் நிகழ்ந்துள்ளதா என்ற ஆச்சர்யம் மேலோங்குகிறது

வாருங்கள் பார்ப்போம்

*ஷெல்வீ அவர்களின் முழுபெயர் தாமோதர்
*தந்தை வழக்கறிஞர் தாயார் அரசு பள்ளி ஆசிரியர் ஷெல்வீ அவர்களின் தொழில் வழக்கறிஞர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சட்ட ஆலோசகராக பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கும் இருந்து வருகிறார்.

*தனது சக வழக்கறிஞர் தோழர்களுடன் இணைந்து “ஓஜோஸ் பார்ம் “ என்ற சட்ட ஆலோசனை மையம் தி.நகரில் உள்ளது.
*ஜோதிடம் என்பது இவருக்கு வாய்க்கப்பெற்றது அனைவருக்கும் கிடைக்க பெறாத வாக்கு வன்மை இவரிடம் அமைத்துள்ளது

*இவரிடம் ஜோதிட பலன் கேட்ட பிரபலங்கள் எண்ணிக்கை பிரம்மாண்டம்.. தமிழகம் தாண்டி இந்திய பிரபலங்கள் பலர் இவரிடம் ஜாதக பலன் கேட்பதும் உண்டு...
*குமுதம் குழும புத்தகங்களில் முக்கியமாக பக்தி இதழில் 25 ஆண்டுகளாக மேலாக பலன்கள் எழுதி வரும் ஒரே ஜோதிடர்.

*தமிழகத்தில் அனைத்து மீடியாக்களிலும் அதாவது டிவி, பேப்பர், யூட்யூப் என சகலத்திலும் வரும்,வந்து கொண்டிருக்கிற ஒரு ஜோதிடர்.. இவருக்கு வாசகர்கள் உலகம் முழுவதிலும் உன்டு .
இவரது கணிப்புகள் அனைத்தும் பலித்து வந்துள்ளன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 5 ம் தேதி கண்டம் ஒன்று உள்ளது என முன்னமே சொன்னவர்

*ரஜினி தனி கட்சி ஆரம்பிப்பார் என முதன் முதலில் சொன்னவர்

*எழுத்து சித்தர் பாலகுமாரன் உடல் நலனில் சிக்கல் ஏற்படும் அவருக்கு பெரிய கன்டம் உள்ளது
என்று முன்னமே கூறி இருந்தார் அவர் சொன்னபடியே நடந்தது.
இவர் எழுத்து சித்தரின் ஆத்மார்த்தமான குடும்ப நண்பர்

*2020 ஆண்டு நன்றாக இருக்கும் என அதிக ஜோதிடர்கள் சொன்ன போது இந்த ஆண்டு புது விதமான வியாதிகள் வரும் அதற்க்கு அரசாங்கம் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் ஆண்டின்
இறுதியில் மருந்துகள் வரும் என்று கடந்த(2019) ஆண்டே குமுதம் இதழில் வந்த ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் புத்தாண்டு பலன்களில் சொன்னவர்(எழுதியவர்)

*மந்த்ராலய்யம் ராகவேந்திர மடத்தின் ஆஸ்தான ஜோதிடர் என்ற பட்டயம் பெற்றவர் அங்கே சட்ட ஆலோசகராகவும் உள்ளார்
*இது தவிர கோவில் கைங்கர்யங்கள்,கல்விக்கான உதவிகள் என இன்னொரு பக்கமும் உண்டு

*சமீபத்தில் கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த போது டிவி மீடியாயக்களில் தனது கண்டன குரலை வலுவாக பதிய வைத்தவர்

*பாரதியஜனாதவின் துணை தலைவராக இருந்த சக்கரவர்த்தி மூலம் நமது கட்சிக்குள் நுழைந்தவர்
*2014 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமையவும் அன்புமணி விஜயகாந்த் இருவரையும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர் இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரையும் வந்துள்ளது..

*இந்த கொரானா காலத்தில் இவர் தனிபட்ட முறையில் செய்த நலத்திட்டங்கள் கணக்கில் அடங்காது.
கிட்டட தட்ட 50 டன்னுக்கு மேற்பட்ட அரிசியும் அதற்க்கு இணையாக மளிகை பொருட்களையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கியுள்ளார்.. முக்கியமாக ஓமந்துரார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் திருவல்லிக்கேனி மக்களுக்கு ராகவேந்திரா மடத்தில் வைத்து கொடுத்தார்
*கொரானா பணியில் இருந்த காவலர்களுக்கு சானிடைசர், முக்கவசம் என அது தனிபட்டியல்

* அறிவுசார் பிரிவின் துணைதலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தி விலகலுக்கு பிறகு தற்பொழுது மாநில தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வெறும் ஜோதிடர் தானே இவருக்கு போய் இந்த அறிவிசார் பதவியா என ஏளனம் செய்பவர்களே நினைவில் கொள்ளுங்கள்

உங்களுக்கு இருக்கும் அறிவை விட நிறையவே அறிவு உள்ளவர்

நீங்க நினைப்பது போல மிக சாதரண நபர் அல்ல தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் அறிந்தவர்
பத்தை கொடுத்து கோடி தந்ததாக விளம்பரம் செய்யும் உலகில், கோடி தந்தும் அமைதியாக #தன்_கடன்_பணி_செய்து_கிடப்பதே, ஏன் விளம்பரம் என தேசத்துக்கும் மக்களுக்கும் தன்னால் இயன்றதை செய்து வருகின்றார் கேலி பேசுங்க தவறில்லை ஆனா நீங்க எல்லாம் யாரை தலைவராக பின்பற்றுகிறீர்களோ
அவர்களின் பின்புலம் அறிந்து இவரை கிண்டல் பண்னுங்க பொதுகூட்டம் போகும் போது தலைவருக்கு விழும் சால்வையை எண்ணி வாங்கி, அதே எண்ணிக்கை குறையாமல் சால்வையை கடையில் விற்க்கும் மனைவியை கொண்ட “தலைவர்”

கட்சியின் பேச்சாளார் வறுமையில் வாடும் போது தலைவரை சந்தித்தால் உதவி
கிடைக்கும் என நம்பி வந்தவரிடம் என்னயா பேசி பேசியே பணம் சம்பாதிச்சுட்ட போல கட்சிக்கு நிதி கொடு என இருந்ததையும் பிடுங்கி விரட்டிய “தலைவர்”..

பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வந்தவர்களிடம் உண்டியல் நீட்டி வசூல் போட்ட “தலைவர்” ..
விவாத நிகழ்ச்சிகளில் “ எங்களில் யார் சிறந்த லூசு” என சண்டையிட்டு மகிழ்ந்த சிகப்பு தலைவர்,

மற்றும் ஏகே 57 ,ஆமைகறி, கப்பல் நிறைய யானை என பொய்யாய் அள்ளி விட்ட “தலைவர்”,

அதையும் அறிவு கெட்ட தனமாக அகமகிழ்ந்து கேட்டு கைதட்டிய நீங்க எல்லாம்,
வழக்கறிஞரும், ஜோதிடருமான, தனக்கு தேவை போக மற்றவற்றை விளம்பரம் இல்லாமல் அள்ளி தரும் பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் ஷெல்வீ அவர்களை கேலி பேசுவது விந்தையே

இப்போ தெரிந்ததா ஷெல்வீ அவர்கள் யார் என.
எப்போதுமே தமிழக பாஜக சரியான நபர்களை சரியான இடத்தில் மிக சரியானவர்களை அமர வைத்து பொறுப்பு தந்து தனக்கு பெருமை தேடிகொள்கிறது என்பது இவரின் நியமனத்தின் மூலம் அறியலாம்...
You can follow @Bhairavinachiya.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.